Wednesday, April 14, 2010


மனச்சாட்சியே மனிதனுக்கு நீதியையும் நேர்மையையும் போதிக்கிறது. தனி மனிதனின் எல்லா நோக்கங்களையும், குறிக்கோள்களையும் உணர்ந்து, ஆராய்ந்து எச்சரிக்கிறது. அதன் எச்சரிக்கையை பின்பற்றாவிட்டாலோ புறக்கணித்தாலோ அதன் எச்சரிக்கை நின்றுவிடுகிறது. மனச்சாட்சி உங்களிடமிருந்து முற்றாகவே விலகிவிடுகிறது. மனச்சாட்சி இல்லாவிட்டால் வாழ்வில் வெற்றிபெற முடியாது.
ஐம்புலன்களை ஆதாரமாக வைத்துத்தான் மூளை வெளியுலக தொடர்புகளை பெறுகிறது. எனினும் புலன்களை எப்போதும் நம்பிவிடக்கூடாது. அவற்றையும் விவேகம், மனச்சாட்சியால் நெறிப்படுத்த வேண்டும்.


No comments:

Post a Comment