Monday, April 26, 2010

ஆன்மீகம் என்பது உலக சுகங்களை எல்லாம் அனுபவித்து முடித்த பின், நடப்பதற்குக்கூட இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தவர்களுக்குரியது என நவீனகால மனிதன் கருதுகிறான். அது உண்மையல்ல. வாழ்வில் சுகமும், துக்கமும் வரும்போது அவற்றால் அதிகம் பாதிக்கப்படாமல் அதாவது அதிகம் மகிழவோ, சோர்ந்து வருந்தவோ செய்யாமல் இரண்டையும் சமநோக்கோடு ஏற்றுக்கொண்டு மன அமைதியுடன் வாழ்வதற்கு உதவுவதே ஆன்மீகமாகும். ஆன்மீகத்திற்கு செலவிட்ட ஒவ்வொரு நிமிடமும் வீணாவதில்லை. அது நிலையான வைப்புக் கணக்கு போன்றது. உலக வாழ்வில் ஈடுபட்டிருந்தாலும் இறைவனை சிந்திக்கவும், ஜப தியானங்கள் செய்யவும் சிறிது நேரத்தையாவது செலவிடுங்கள்.

No comments:

Post a Comment