Thursday, June 30, 2011

உன்னுடைய ஒவ்வொரு அசைவும் எனக்கு இனிய கனவுகளாக வேண்டும். உன் ..உன் அழகிய வடிவத்தை  எப்பொழுதும்  அன்புடன் தியானிக்க  வேண்டும். உன் திருநாமம் என்னை விட்டு பிரியாத சிந்தனை மலர்களாக வேண்டும். உன் கடாட்சம் என்ற கருணைத் தென்றலில்  கரைந்து போக வேண்டும்.  என் வாழ்விற்கு அனைத்தும் நீயே  அம்மா!!

Saturday, June 25, 2011

உன்   அடைக்கலத்தை நான் எப்போதும் தேடுகின்றேன். அளவின்றி  அழுகின்றேன்  அம்மா.  உன்னுடைய அழியா   தெய்வீக மகிமையை  அறிந்து என் அறிவு தெளிவடைய  உன்னை இடைவிடாமல் தேடுகிறேன்.  

Thursday, June 9, 2011

உலகில் அன்பும், பேரன்பும் இருக்கின்றன. நீங்கள் உங்களுடைய குடும்பத்தினர் மீது அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால் அண்டை வீட்டார் மீது அன்பு காட்டுவதில்லை. உங்கள் பெற்றோர் மீது அன்பு காட்டுகிறீர்கள் . ஆனால் அதேமாதிரி அனைவர் மீதும் அன்பு காட்டுவதில்லை. உங்கள் மதத்தின் மீது அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால் எல்லா மதங்களின் மீதும் அன்பு காட்டுவதில்லை. பிற மதத்தவரை வெறுக்கக்கூடச் செய்கிறீர்கள். உங்கள் நாட்டின் மீது அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால் எல்லா நாடுகளின் மீதும் அன்பு காட்டுவதில்லை. இது நிஜமான பேரன்பாகாது. இது குறுகிய அன்பாகும். இந்த குறுகிய அன்பை தெய்வீகப் பேரன்பாக மாற்றுவதே ஆன்மீகத்தின் இலச்சியமாகும். இந்த பேரன்பின் நிறை நிலையில் அழகிய, நறுமணமிக்க  கருணை என்னும் மலர் மலர்கிறது. 
அன்பே சிவம்!!

Wednesday, June 8, 2011

ஆண்டவா! ஒவ்வொரு சூழ்நிலையிலும் புத்திசாலித்தனத்துடனும், விவேகத்துடனும் செயல்புரியும் சக்தியைக் கொடு. சிரமமான சூழலிலும் உன்னை மறவாத மனநிலையைக் கொடு. இன்பமோ, துன்பமோ உன் திருவடிகளைப் போற்றும் பாக்கியம் மட்டுமே வேண்டும்.