Saturday, November 26, 2011

மரத்துப்போன  இதயங்கள் --சிந்தனைக்கதை----
ஒரு சமய மாநாட்டில் பங்கெடுப்பதற்காக நால்வர் ஒரு தீவில் தங்கினர்.  மிகவும் குளிராக இருந்தது.  பயணிகள் நால்வரின் கையிலும் குளிர் காய்வதற்கு தேவையான தீப்பெட்டியும், விறகும் இருந்தன. ஆனால் தன் கையில் மட்டுமே விறகும், தீப்பெட்டியும் இருப்பதாக அந்நால்வரும் கருதினர். 
முதல் ஆள் " அவன் கழுத்தில் தொங்கும் டொலரைக் கண்டால் அவன் வேறு மதத்தை சேர்ந்தவன் என்று தோன்றுகிறது. நான் எதற்காக அவனுக்கும் சேர்த்து தீ மூட்ட வேண்டும்" என்று சிந்தித்தான்: 
இரண்டாவது ஆள்  "இவன் எதிரி நாட்டை சேர்ந்தவன். எங்களுடன் எப்போதும் போர் செய்பவன். என் விறகும் தீப்பெட்டியும் உபயோகித்து அவன் குளிர்காய வேண்டாம். அதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது" என்று நினைத்தான்.
மூன்றாவது ஆள் " மற்றொருவனை நோக்கி இவனை எனக்கு நன்றாகத் தெரியும். இவன் எங்கள் மதத்திற்கு பிரச்சனைகளை உண்டாக்கும் பிரிவைச் சேர்ந்தவன். என் விறகையும், தீப்பெட்டியையும் உபயோகித்து இவன் குளிர் காய்வதை என்னால் கனவு கூட காண முடியாது" என்று எண்ணினான். 
நான்காவது ஆள்; "அவனுடைய உடல் நிறத்தைப் பார், எனக்கு  இந்நிறத்தவரை கண்டாலே வெறுப்பு.  நான் இவனுக்கு தீமூட்டிக் கொடுக்கும் பேச்சே இல்லை"  என்று தீர்மானித்தான். 
இவ்வாறு நால்வரும் தங்கள் கையிலிருந்த விறகையும், தீப்பெட்டியையும் உபயோகிக்காமல் குளிரால் உடல் விறைத்து இறந்து போனார்கள். உண்மையில் இவர்கள் இறந்தது வெளியில் நிலவிய குளிரால் அல்ல. மரத்துப்போன அவர்கள் மனோபாவத்தினால் தான்.    இது போல்  நாடு, மதம், இனம், மொழி  என்று  நாமும்  மரத்துப்போன இதயங்களால் அழிந்து கொண்டிருக்கிறோம். வேற்றுமையிலும் ஒற்றுமை காண்போம். அன்பால் உலகை ஆள்வோம். 

Friday, November 25, 2011


 உங்களுக்குள்ளேயே இருந்து நன்மை செய்வது மட்டுமின்றி, மற்றவர்கள் மூலமாகவும், வாய்ப்புகளின் வடிவிலும் வளர்ச்சியை ஏற்படுத்துகிறான் இறைவன்.  உங்களது பலவீனத்தை நினைத்து கவலைப்படாதீர்கள். அவற்றைப் பொறுத்துக் கொள்ளுங்கள். அந்த பலவீனத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து விடுங்கள். அவற்றை திருத்துவதுடன் வேண்டியதை அளிப்பது அவனது கடமை.

Wednesday, November 16, 2011

Sunday, November 13, 2011


மிருகங்களுக்கு பகுத்தறிவு இல்லை. ஆனால், அவை வாழ்க்கை நெறியிலிருந்து தவறவில்லை. அதற்கு தரப்பட்ட விதியை சரிவரப் பின்பற்றுகிறது. பகுத்தறிவு படைத்த மனிதன் மட்டுமே, வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண்டு விட்டான். எதற்காக? இறைவனால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தனது இஷ்டப்படி அமையவில்லை என்பதற்காக! இப்படி மனிதன் சீரழிந்து போவதைத்தான் நமது சாஸ்திரங்கள் தடுக்கிறது. வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்பவர்களுக்கு, சாஸ்திர அடிப்படை உதவும். அவை கூறும் தர்மங்களை ஒழுங்காகப் பின்பற்றுபவர்களுக்கு இறைவனுடைய அருள் கிடைக்கும். இன்றைய நவீன உலகில், கட்டுப்பாடான அமைப்பைக் குலைக்கவும், மாற்றவும் முயல்வது தான் நாகரிகம் எனக் கருதப்படுகிறது. நாகரிகம் என்ற பெயரில் அத்துமீறி நடக்கிறோம்.காலம் மாறி விட்டதால் நாமும் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், இயற்கையைப் பாருங்கள். ஒரு ஒழுங்கில் இயங்குகிறது. மனிதன் மட்டும் எதையும் சாப்பிடுகிறான். எதையும் உடுத்துகிறான். உயர்ந்த நிலையில் இருக்க வேண்டிய மனிதன் தன் நிலையிலிருந்து கீழிறங்கி தாழ்நிலையை அடைந்து விட்டான். மனிதர்கள் பிறருக்காக தன்னலமற்று வாழ்வது தான் வாழ்க்கை நெறிமுறையாகும்.

Sunday, November 6, 2011





குரு அளித்த மந்திரம்தான் நம்மைத் தூய்மைப்படுத்தவல்லது. அம் மந்திரத்தை ஓத, ஓத அது இறைவனுடன் நம்மைச் சேர்க்கும் பாலமாகிறது.
வாழ்க்கை எனும் ரயில் பயணத்தில் இறைவன் பச்சைக்கொடி காட்டிக்கொண்டிருக்கும் வரை நமது மூச்சுக்காற்று நம் உயிரைக் காத்து வருகிறது. அவனது இச்சைமாறி அது சிவப்புக் கொடியானால் இந்த உடலை விட்டு உயிர் பிரிகிறது.
நமது உயிர் காக்கும் கவசமாக நமது நாடி நரம்புகளில் எல்லாம் இறைநாமத்தால் நிரப்பவேண்டும்.
பகவானுக்கும் அவனது திருநாமத்துக்கும்
வித்தியாசமே கிடையாது.
- ஸ்ரீராமகிருஷ்ணர்