Wednesday, February 24, 2010

pics






கடவுளிடமிருந்து ஒரு கடிதம்


கடவுளிடமிருந்து ஒரு கடிதம்
இன்று காலையில் நீ எழுந்ததிலிருந்து உன்னை கவனித்து வந்தேன்.நேற்று நிகழ்ந்த நல்லதை குறித்து எனக்கு நன்றி செலுத்துவாய்,இன்று நிகழ இருப்பது பற்றி எனது கருத்து கேட்பாய், ஒரு சில வார்த்தைகளாவது என்னுடன் பேசுவாய் என்று எதிபார்த்தேன்.நீயோ வேலைக்குப் போகும் போது அணிவதற்கு பொருத்தமான ஆடைகளை தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாய்.ஒரு சந்தர்ப்பத்தில் செய்வதற்கு ஏதுமின்றி, நீ நாற்காலியில் பதினைந்து நிமிடங்கள் ஓய்வாக உட்கார்ந்த்திருந்தாய்.ஒ! நீ எழுவதைக் கண்டேன்.என்னுடன் பேசுவதற்காகவே வருகிறாய் என்ற சந்தோசத்துடன் உன் முகத்தை நோக்கினேன்.ஆனால் என்னை அலட்சியம் செய்த நீ தொலைபேசியின் மூலம் ஒரு நண்பனுடன் அரட்டை அடிக்க ஆரம்பித்தாய் நீ வேலைக்கு சென்ற போது உன்னைக்கவனித்தேன்.முற்பகல் முழுவதும் உனக்காக காத்திருந்தேன்.உனது அலுவல்களிலேயே மூழ்கியிருந்த நீ என்னிடம் எதுவும் பேசவில்லை.மதிய உணவை அருந்த அமர்ந்த நீ சுற்றும் முற்றும் பார்த்தாய்.என்னுடன் பேசுவது உனக்கு தர்ம சங்கடத்தை தருமென எண்ணினாய் போலும்; நீ எனக்கு தலை வணங்க வில்லை.உனது அலுவலக நண்பர்களில் சிலர் உணவை அருந்த முன்பு எனக்கு நன்றி கூறியதைக் கவனித்தாய்.ஆனால் நீ செய்ய வில்லை! போனது போகட்டும்.இனியும் நேரம் இருக்கிறது.நீ என்னுடன் பேசுவாய் என நான் உறுதியாக நம்பினேன்.
மாலையில் வீடு திரும்பிய உனக்காக காத்திருந்த சில வேலைகளை செய்து முடித்த பிறகு தொலைக்காட்சியை பார்க்க ஆரம்பித்தாய்.நீ தொலைக்காட்சியை பார்த்த போதும், இரவு உணவை அருந்திய போதும், உனது வருகைக்காக பொறுமையாக நான் காத்திருந்தேன்.ஆனால் நீ என்னுடன் பேசவில்லை.படுக்கும் நேரம் வந்தது.இப்போதாவது நீ என்னுடன் பேசாமல் இருக்க மாட்டாய் என்ற ஆவலுடன் உனது வரவிற்காக காத்திருந்தேன்.குடும்பத்தினருக்கு "குட் நைட்" சொல்லி நீ என்னை திரும்பியும் பார்க்காமல் படுக்கைக்கு சென்றாய். படுத்த உடனே உறங்கியும் விட்டாய்.
பரவாயில்லை! நான் உனக்காக எப்போதும் காத்திருக்கிறேன்.உன்னால் கற்பனை செய்து பார்க்கவும் முடியாத அளவு பொறுமை மிகுந்தவன் நான்.பொறுமையாக நடந்து கொள்வது எப்படி என்பதை உனக்கு கற்பிக்க விருபுகிறேன்.நீ என்னை அலட்சியம் செய்த போதிலும் நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.எனவே, தினமும் உனது இதயம் நிறைந்த நன்றியை, பிரார்த்தனையை,சிந்தனையை அல்லது தலை வணங்குதலையாவது எதிபார்த்து காத்திருக்கிறேன்.
இதோ, மற்றொரு புதிய தினம் மலர்ந்து விட்டது.நீ விழித்து விட்டாய். இதோ,இப்போதும் உனக்காக நான் காத்திருக்கிறேன்.இன்றாவது நீ என்னிடம் பேசுவாய்! எனக்காக சில நிமிடங்களை ஒதுக்குவாய் என்று நம்புகிறேன்.உனது நலனை மட்டுமே விரும்பும்.--------உனது இனிய நண்பன் கடவுள்-------

இன்று நாம் இறைவனுக்கு கொடுத்திருக்கும் இடம் எது என்பதை விளக்கும் கற்பனைச் சொல்லோவியமே இது.அதைப் புரிந்து கொள்ளவோ அவரது குரலைக் கேட்கவோ உலக சுகங்களில் மூழ்கியிருக்கும் நம்மால் இயலவில்லை. போனது போகட்டும் இனியாவது நாம் இறைவனுக்கு உரிய இடத்தை அளிப்போம்.இறைவனுக்கும் நமக்கும் இடையில் அன்புப் பாலம் உருவாகட்டும்.நமது வாழ்வே இறைவன் ஆனந்த நடமிடும் மேடையாக மாறட்டும்.**************

Tuesday, February 23, 2010

Sunday, February 21, 2010

Wednesday, February 17, 2010

ஆண்-பெண் சமத்துவம் : அம்மாவின் அருளுரை


பழங்காலத்தில் ஆண்கள் ஒருவழிப் பாதையைப் போல் இருந்தார்கள். அப்படி ஆகாமல், அவர்கள் ஒரு நெடுஞ்சாலையைப் போல் ஆகவேண்டும். பெண்கள் முன்னேறுவதற்கு வசதியாக பாதை அமைத்துக் கொடுப்பது மட்டுமல்ல, வழிவிட்டுக் கொடுக்கவும் முன்வர வேண்டும். ஆண்களுக்கு பெண்களைவிட தசையும், உடல் பலமும் அதிகம் உண்டு. ஆனால் அந்த பலத்தை உபயோகித்து பெண்களை கீழ்ப்படுத்தாமல், அவர்களுக்கு உதவ வேண்டும்.



பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர் பதவிகளை அளிப்பதைப் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும். சமத்துவம் என்பது அதிகாரம் மற்றும் பதவியால் வருவதல்ல, அது இதயம் சம்பந்தப்பட்டதாகும். அது ஒரு மனோபாவமாகும். ஆணும்-பெண்ணும் புத்திக்கு முக்கியத்துவம் அளிப்பது போலவே இதயத்திற்கும் முக்கிய இடமளிக்க வேண்டும். இதயத்தையும், புத்தியையும் இணைத்து செயல்படுத்தவும், ஒருவர் மற்றவருக்கு நல் உதாரணமாக அமையவும் முயற்சிக்க வேண்டும். அப்போது சமத்துவமும், இசைவும் இயல்பாக வந்து சேரும்.

வெளிப்படையாக யாரும் யாருக்கும் சமமாக முடியாது. கோழியால் சேவலைப் போல கூவ முடியாது. அதேசயமம், சேவலால் முட்டை இட முடியுமா? ஆனால், வெளிப்படையான வேறுபாடுகள் இருந்த போதிலும், மனதால் ஆணும், பெண்ணும் ஒன்றாக முடியும். மின்சாரமானது குளிர்சாதனப் பெட்டியின் மூலம் குளிர்ச்சியாகவும், ஹீட்டரின் மூலம் வெப்பமாகவும், மின் விளக்கின் மூலம் ஒளியாகவும் வெளிப்படுகிறது.

தொலைக்காட்சியின் இயல்பு மின் விளக்கிலோ மின் விளக்கின் இயல்பு தொலைக்காட்சியிலோ காணப்படுவதில்லை. குளிர்சாதனப் பெட்டி ஹீட்டரின் இயல்பையே, ஹீட்டர் குளிர்சாதனப் பெட்டியின் இயல்பையோ வெளிப்படுத்த முடியாது. இருப்பினும், எல்லா உபகரணங்களின் மூலமும் செயல்படும் மின்சாரம் ஒன்றாகும். அதுபோலவே, வெளிப்படையான வேறுபாடுகள் ஆண்-பெண்ணுக்கு இடையில் காணப்பட்டாலும், அவர்களுக்குள் குடியிருக்கும் ஆத்ம சைதன்யம் (இறையுணர்வு) ஒன்றே ஆகும்.

இயற்கையிலுள்ள அனைத்திற்கும் அவற்றிற்கே உரிய இடம் உண்டு. பொருளற்றதாக எதுவுமில்லை. அனைத்திலும் சைதன்யம் உண்டு. ஒரு பொருள் சிறியதாயினும், பெரியதாயினும் அவற்றிற்கே உரிய தனித்தன்மை உண்டு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கதிரவனில் வெப்பமும், கடலில் அலையும், காற்றில் குளிர்ச்சியும் இருப்பது அவற்றின் இயல்பாகும். மானிற்கு சாந்த குணத்தையும், சிங்கத்திற்கு கொடிய குணத்தையும் அளிப்பது இந்த அடிப்படை இயல்பே ஆகும். அதேபோல், ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுக்கே உரிய இயல்பு உண்டு. அதுவே ஒவ்வொருவரையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. இதை மறந்துவிட்டு ஆணும், பெண்ணும் செயல்படக்கூடாது.

ஆண்களைத் தோல்வியுறச் செய்யும் முயற்சியில், பெண் தனக்குக் கிடைத்துள்ள தாய்மை எனும் வரப்பிரசாதத்தை மறந்து, புகைபிடிக்கவும், மதுவருந்தவும் செய்தால், அது அவளுக்கும் சமூகத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும். இதனால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
பெண்களை விட ஆணோ, ஆணைவிடப் பெண்ணோ மேலானவர் அல்ல. படைப்பில், யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் இல்லை என்பதே உண்மையாகும்.

மேன்மையான இடத்தை இறைவனுக்கு மட்டும் அளித்து, ஆணும், பெண்ணும் அந்த ஒப்பற்ற சக்திக்கு சேவை செய்யும் வெறும் கருவிகளாக மாறவேண்டும். இந்த மனோபாவத்திலிருந்து தான் ஆண்-பெண்ணுக்கிடையில் சரியான சமத்துவம் உருவாகிறது

Saturday, February 13, 2010

Tuesday, February 9, 2010

Sunday, February 7, 2010

:)













இந்து மதம்-அறிமுகம்

பெயர் வந்தவிதம்

பாரசீகத்தினர் சிந்து நதிக்கு கிழக்குப் பக்கம் வசிப்பவர்களை சிந்துக்கள் என்றும் அவர்களது இறையுணர்வு முறையை (மதத்தை) சிந்து மதம் என்றும் அழைக்கலாயினர். பாரசீக மொழியில் ச எழுத்து ஹ சப்தத்துடன் பேசப்படும். ஆகவே சிந்து ஹிந்துவாயிற்று.


இயல்பாக விளைந்த ஒன்றை கோட்பாடுகள், விதிமுறைகள் என்று கட்டம் கட்டும் முயற்சி பின்னர் நடந்தது. இன்றைய இந்து மதத்தை ஒரு வரியில் சொல்லுவதாக இருந்தால் ‘வேதத்தை நம்புபவர்கள்’ என்று சொல்லலாம். இவர்களது விதிமுறைகள் என்று ஆரம்பித்தால் ஒரு வரியில் சொல்வதானால் ‘எல்லாமே’ என்று வேண்டுமானால் சொல்லலாம். மற்றபடி ஒரு வரியிலோ அல்லது ஒரு பக்கத்திலோ கூட சொல்லுவது கடினம்.

ஆரம்பம்

இயல்பாக தோன்றிய ஒன்றிற்கு ஆரம்ப கால வரலாறு அறிவது கடினம். இந்துப் பெரியோர்களைக் கேட்டால் மனிதகுலம் தோன்றிய போதிலிருந்து இருந்து வருவதாக கூறுவார்கள். ஐரோப்பிய அறிஞர்கள் இந்து மதம் கிறிஸ்துவுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கூறுகிறார்கள். ஆனால் இதைத் தவறென்று நிரூபிக்க கிறிஸ்துவுக்கு 5000 ஆண்டுகள் முந்தைய கல்வெட்டுக்கள், சிலைகள் ஏராளமாக இந்தியாவில் இருக்கின்றன.

இயல்பு

பழங்காலத்தில் பூமியில் இருந்த மதங்களில் இன்றளவும் உயிர்ப்புடன் இருந்து உலகிலுள்ள பெரிய மதங்களில் ஒன்றாக இருப்பது இந்து மதம் மட்டுமே. மற்றப் பெரிய மதங்களான புத்த மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாம் ஆகியவை கடந்த சுமார் 2500 வருடங்களில் தோன்றியவை. இதில் புத்த மதம் நேரடியாக இந்து மதத்திலிருந்து தோன்றியது.

கிறிஸ்தவ மதம், இஸ்லாம் ஆகியவை தோன்றிய போது அந்த இடங்களில் ஏற்கனவே ஆதிக்கத்தில் இருந்த மதங்கள் அவற்றை எதிர்க்க முயன்று அழிந்து போயின. இந்து மதத்தில் புதுக் கருத்துக்களுக்கும் வழிமுறைகளுக்கும் எப்போதுமே இடம் இருப்பதால் அத்தகைய நிலை ஏற்படவில்லை. மேலும் மற்ற மதங்கள் வெளியிலிருந்து புகும் போதும், அவற்றைப் புகுத்திய அரசர்கள் வலுக்கட்டாயமாக திணிக்காதவரை, இந்து மதம் அதை எதிர்த்ததில்லை. மாறாக இருபுறமும் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றமே நிகழ்ந்தது.

எண்ணற்றக் கடவுள்கள், சிலை வழிபாடுகள், இயற்கை வழிபாடுகள் எல்லாம் இந்து மதத்தில் உண்டு. உருவமற்ற எங்கும் நிறைந்த கடவுள் தத்துவமும் மிகச் சிறந்த விளக்கங்களுடன் இதில் உண்டு. ஒன்றுக்கொன்று எதிர் மறையான கருத்துகள் இதில் ஏராளம். இவை குழப்பம் ஏற்படுத்துவதற்கு பதிலாக இவற்றில் ஈடுபடும் மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. இந்த எதிர்மறைகளில் இருந்து நேரடி இறையுணர்விற்கு இவை சிந்திக்கும் மனிதனை தூண்டிவிடுகின்றன.

Thursday, February 4, 2010

Amma :)

Recognition

In 1993, she was one of the representatives of Hinduism at the Parliament of the World's Religions in Chicago.

Mata Amritanandamayi was the keynote speaker at the Global Peace Initiative of Women, at the UN in Geneva, Switzerland held in October 2002. This was an initiative of the UN' Millennium World Peace Summit,[8] in which Mata Amritanandamayi spoke in August 2000.

In 2002 Mata Amritanandamayi was presented with the Gandhi-King Award for Non-Violence by The World Movement for Nonviolence at the UN General Assembly Hall (Palais Des Nations) in Geneva in recognition of her lifelong work in furthering the principles of non-violence. The three previous recipients of the award were Kofi Annan, Nelson Mandela, and primatologist Dr. Jane Goodall.

In 2006, Amma was honoured with the 4th Annual James Parks Morton Interfaith Award at the Interfaith Centre, New York. The Interfaith Award annually honors global leaders who forward the ICNY-mission of promoting peace, interfaith understanding and action through social and cultural programs. Some others who had previously accepted the awards are former US President Bill Clinton, Dalai Lama, Dr. Mohamed ElBaradei, Shirin Ebadi, Archbishop Desmond Tutu and famous Indian musician Pandit Ravi Shankar.[9]

In Oct 2007, Amma was awarded for her humanitarian activities at human rights film festival, Cinema Verite, in Paris. Actress Sharon Stone presented the award.[10]

In March, 2008, in Jaipur, Rajasthan, India, Amma gave the keynote address for the Global Peace Initiative of Women's international conference entitled "MAKING WAY FOR THE FEMININE for the Benefit of the World Community".

File:Mata Amritanandamayi.jpg


Wednesday, February 3, 2010

Hinduismus

Hinduism is the predominant religious tradition[1] of South Asia, especially in the Republic of India and in Nepal. Hinduism is often referred to as Sanātana Dharma (a Sanskrit phrase meaning "the eternal law") by its adherents.[2]Generic "types" of Hinduism that attempt to accommodate a variety of complex views span folk and Vedic Hinduism to bhakti tradition, as in Vaishnavism. Hinduism also includes yogic traditions and a wide spectrum of "daily morality" based on the notion of karma and societal norms such as Hindu marriage customs.

Hinduism is formed of diverse traditions and has no single founder.[3] Among its roots is the historical Vedic religion of Iron Age India, and as such Hinduism is often called the "oldest living religion"[4] or the "oldest living major tradition".[5][6][7][8]

Demographically, Hinduism is the world's third largest religion after Christianity and Islam, with approximately one billion adherents, of whom approximately 905 million live in the Republic of India.[9] Other significant populations are found in Nepal (23 million) and Bangladesh (14 million).

A large body of texts is classified as Hindu, divided into Śruti ("revealed") and Smriti ("remembered") texts. These texts discuss theology, philosophy and mythology, and provide information on the practice of dharma (religious living). Among these texts, the Vedas are the foremost in authority, importance and antiquity. Other major scriptures include the Upanishads, Purāṇas and the epics Mahābhārata and Rāmāyaṇa. The Bhagavad Gītā, a treatise from the Mahābhārata, spoken by Krishna, is of special importance.[10]

Tuesday, February 2, 2010

வணக்கம்
"Life and Love are not two,They are inseparable like a word and its meaning"
---Amma---
ஏழைகள் மீதும்,துன்பப்படுபவர்கள் மீதும் கருணை காட்டுவதே உண்மையான அன்பும் பக்தியுமாகும்.பசித்திருப்போர்க்கு உணவளியுங்கள்,திக்கற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்,கவலைப்படுபவர்களுக்கு ஆறுதல் அளியுங்கள்,துயரப்படுவோர்க்கு நிவாரணம் அளியுங்கள்,எல்லோர் மீதும் இரக்கம் காட்டுங்கள்,ஒன்றுமே முடியவில்லை என்றால் அன்போடு ஒரு புன்னகை சிந்துங்கள்.இவை தான் மதங்களின் அடிப்படை.அதன் பின்பு தான் மற்றவை எல்லாம்.*****மாதா அமிர்தானந்த மயி ***** அன்பே வடிவான அம்மா


Monday, February 1, 2010

Darshan



Mata Amritanandamayi is known to the world media as 'the hugging saint'. She offers a hug to everyone who approaches her and in India she has been known to individually hug over 50,000 people in a day, sitting sometimes for over 20 hours. Worldwide, Mata Amritanandamayi is said to have hugged at least 30 million people in the past 30 years.

EXTERNAL LINKS

Amritapuri.org (Official mission site - India)
Amma Europe (Official portal to European Amma sites)
Amma.org (Official mission site - USA)
Youtube Ammafootage (Official Youtube site)
embracingtheworld.org (Amma's Charitable Projects site)
Amma.org Centers (USA site directory of all centers worldwide)
Amma Foundation of Canada (Official mission site - Canada)
Amma Russia (Official mission site - Russia)
Amma Japan (Official mission site - Japan)
Amrita Centre Kenya (Official mission site - Kenya)
Amma Australia (Official mission site - Australia)
Ammabrasil.org (Official mission site - Brazil)
Amrita.edu (Amrita University is a multi-campus and multi-disciplinary teaching and research university offering over a hundred different programs - Various cities in India)
AIMSHospital.org (Amrita Institute of Medical Sciences - Kochi, Kerala, India)
Amritapuja.org (International puja request site)
Amrita Technologies (Healthcare informatics)
Amrita Research Labs (R&D Center of Amrita Vishwa Vidyapeetham University)
Amritavarsham 50 (Golden Jubilee 50th Birthday Celebration 2003)
Amrita Learning (Amrita Learning is a research-based; 'adaptive learning' software for children, in collaboration with Amrita University based on NCERT/CBSE syllabus)
Amrita Vidyalayam (In India - A national network of value based schools managed by Mata Amritanandamayi Math)
AYUDH International (Amrita Yuva Dharma Dhara - International youth movement)
Darshan The Embrace (film website)
Farmers Relief Project In India - Farmers Relief Project
Green Friends (Amma's international environmental initiative)
Immortal Bliss Magazine (Immortal Bliss is a publication dedicated to spreading Amma's teachings and publicizing the worldwide activities of the M.A. Math)
WorldWide Community website (Amma's Children WorldWide Community website)
Online Virtual Puja Room (Amma Blessed Online Virtual Puja Room)

GuruStotram from AmmasChildren.org on Vimeo.

Amma's International events


International events


அம்மாவின் அவதாரம் அல்லது அலங்காரம்! அதற்குரிய விளக்கம் அம்மாவாலேயே கொடுக்கப்பட்டுருக்கிறது..-----ஒரு நடிகன் எந்த வேடம்
அணிந்தாலும் தான் யார் என்பது அவனுக்கு நன்றாக தெரியும்.எந்த வேஷம் போட்டாலும் நடிகனின் மனதில் எந்தவித மாற்றமுமில்லை.அதுபோல் எந்த வேஷத்தை போட்டாலும் தான் யார் என்பது அம்மாவுக்கு தெரியும்.அம்மா இவை எவற்றிலும் கட்டுப்படுவதில்லை.இந்த வேஷம் கூட அம்மா தானே அணிந்த வேஷமா? பக்தர்கள் விரும்பினார்கள்.அவர்கள் சமர்ப்பித்தார்கள் அவர்கள் ஆனந்தம் அடைகிறார்கள்.
அம்மா வடஇந்தியாவில் சில இடங்களுக்கு செல்வதுண்டு.அங்கே அம்மாவை காண சில சமயங்களில் கிருஷ்ண பக்தர்கள் வருவதுண்டு.அவர்கள் அம்மா தலையில் கிரீடம் சூட்டுவார்கள்,மயிலிறகு வைப்பார்கள்,மஞ்சள் பட்டாடை சாத்துவார்கள்,புல்லாங்குழலை கையில் தருவார்கள்,ஆரத்தி காண்பிப்பார்கள்.அவர்கள் அதில் ஆனந்தம் அடைகிறார்கள்.அவர்களுடைய சந்தோசத்திற்காக அம்மா அனுமதிக்கிறேன்."நான் வேதாந்தி.என்னால் இதற்கு சம்மதிக்க முடியாது"என்று சொல்ல அம்மாவால் முடியாது.அம்மா ஆரம்ப காலங்களில் எந்த வேஷமும் அணியவில்லை.பக்தர்கள் ஒவ்வொன்றாக கொண்டு வந்தார்கள்.அவர்களின் சந்தோசத்திக்காகவும் திருப்திக்காகவும்
அம்மா அவற்றை அணிகிறேன்.அவ்வாறு அது சடங்காக மாறிவிட்டது.--------ஸ்ரீமாதாஅமிர்தானந்தமயி *******ஒளியைநோக்கி முதலாம் பாகம் எனும் புத்தகத்திலிருந்து