Wednesday, April 28, 2010
Monday, April 26, 2010
Friday, April 23, 2010
Thursday, April 22, 2010
Tuesday, April 20, 2010
Sunday, April 18, 2010
குண்டலினி சக்தி
குண்டலினி சக்தி என்பது எல்லா உயிரினங்களிலும் இருக்கும் ஜீவசக்தி ஆகும்: இது முதுகெலும்பின் அடிப்பாகத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்பாம்பைப் போன்றது. இடைவிடாத தியானத்தாலும், குருவின் அருளாலும் இச்சக்தி விழிப்படைகிறது. அப்போது அது முதுகெலும்பில் உள்ள கழுமுனை நாடி வழியாக தலையில் இருக்கும் ஷஹஸ்ராரத்தில் உள்ள ஆண்பம்பைக் காணும் ஆவலில் மேலெழுந்து செல்கிறது. யோகத்தினால் ஏற்படும் உள்ளுணர்வின் வாயிலாக இதை அனுபவிக்கலாம். குண்டலினி சக்தி ஒரு ஆதாரத்தை அடைந்த பிறகு அந்த ஆதாரத்தை நன்றாக மலரச் செய்து செம்மைப்படுத்தி அடுத்த ஆதாரத்திற்கு செல்கிறது. குண்டலினி சக்தி ஒவ்வொரு ஆதாரத்தை அடையும் பொழுதும் சாதகன் பல விதமான அனுபவங்களைப் பெறுகிறான். தெய்வீகமான அனுபவங்களும், ஆசையைத் தூண்டிவிடும் அனுபவங்களும் ஏற்படும். ஒரு சற்குருவின் மேற்பார்வை இல்லாத சாதகன் இந்த நிலைகளை மிக உயர்ந்தது, கடவுள் காட்சி கிடைத்துவிட்டது என்று தவறாக எண்ணி ஆன்மீகப் பாதையிலிருந்து வழுவலாம். இதனால்தான் சற்குருவின் கண்காணிப்பு ஒரு சாதகனுக்கு மிக அவசியம் என்று கூறப்படுகிறது.
Saturday, April 17, 2010
Friday, April 16, 2010
Wednesday, April 14, 2010
மனச்சாட்சியே மனிதனுக்கு நீதியையும் நேர்மையையும் போதிக்கிறது. தனி மனிதனின் எல்லா நோக்கங்களையும், குறிக்கோள்களையும் உணர்ந்து, ஆராய்ந்து எச்சரிக்கிறது. அதன் எச்சரிக்கையை பின்பற்றாவிட்டாலோ புறக்கணித்தாலோ அதன் எச்சரிக்கை நின்றுவிடுகிறது. மனச்சாட்சி உங்களிடமிருந்து முற்றாகவே விலகிவிடுகிறது. மனச்சாட்சி இல்லாவிட்டால் வாழ்வில் வெற்றிபெற முடியாது.ஐம்புலன்களை ஆதாரமாக வைத்துத்தான் மூளை வெளியுலக தொடர்புகளை பெறுகிறது. எனினும் புலன்களை எப்போதும் நம்பிவிடக்கூடாது. அவற்றையும் விவேகம், மனச்சாட்சியால் நெறிப்படுத்த வேண்டும்.
Tuesday, April 13, 2010
புத்தாண்டு பிறந்துள்ளது. புதுவருடப் பிறப்பு என்பது நம் மனங்களில் உற்சாகமும், எதிபார்ப்பும் நிறைகின்ற சமயமாகும். வருடம் மாறியதால் மாற்றம் ஏற்பட்டுவிடாது. மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் நாமும் முயற்சி செய்ய வேண்டும். அப்போது தான் நமது எதிபார்ப்புகள் நிறைவேறும். அனைவரும் முயற்சி செய்து முன்னேறுவதாக இவ்வருடம் அமையட்டும். சுற்றுப்புறமே ஆனந்தம் நிறைந்ததாக மாறட்டும். சென்ற வருடத்தைவிட சிறிதாவது ஒரு நல்ல குடும்பத்தை, ஒரு நல்ல நாட்டை உருவாக்க நம் அனைவருக்கும் இயலட்டும். அம்மாவின் குழந்தைகள் அன்பு மற்றும் அமைதியின் செய்தியை தாங்கிச் செல்லட்டும். அனைவரின் வாழ்விலும் அமைதியும் சந்தோசமும் நிறைய அம்மா பரமாத்மாவிடம் பிரார்த்திக்கிறேன்.*******அம்மா*******
Monday, April 12, 2010
உறங்கும் விழிகள் உலகத்தைக் காண்பதில்லை. மயங்கும் மனம் ஆன்மாவை அறிவதில்லை.
ஒவ்வோர் உயிரிலும் தெய்வசக்தி உள்ளது. மானிடத்தில் தெய்வசக்தி மறைந்திருப்பதை ஞானியர் அறிவர். அவர்களுடைய ஆழ்ந்த தியானம் அதைக் காட்டும்.
மனிதன் ஒளியைத் தேடும் இன்னொரு ஒளி.
படிக்கிறவனுக்கு பத்து எண்ணங்கள், பார்க்கிறவனுக்கு நூறு எண்ணங்கள், அனுபவிக்கிறவனுக்கோ ஆயிரமாயிரம் எண்ணங்கள். ஆனால் தியானிக்கிறவனுக்கோ ஒரேயொரு எண்ணம்தான்.
. ஆன்மா மிகச்சிறிய ஒளிப்பொறி அது தொட்டுணரக் கூடியதோ கண்டறியக் கூடியதோ அல்ல.
Sunday, April 11, 2010
சிந்தனைக்கதை:எத்தனை பேர்?
Friday, April 9, 2010
மனோபாவம்
ஒருமுறை மருத்துவர் ஒருவர் கிராமத்திற்குச் சென்று, மது அருந்துவதால் விளையும் தீமைகளைத் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தத் தீர்மானித்தார். கிராமத்திலிருந்த குடிகாரர்களை ஒன்றாகக் கூட்டினார். அவர்களுக்கு மதுவால் விளையும் தீமைகளைக் குறித்து உணர்த்த பலவற்றைக் கூறிப் பார்த்தார். தனது முயற்சி நினைத்த அளவு பலனளிக்கவில்லை என்பதை அறிந்து, ஒரு பரிசோதனையின் மூலம் புரியவைக்கத் தீர்மானித்தார். அவர், இரண்டு கண்ணாடிக் குப்பிகளை எடுத்தார். ஒன்றில் சுத்தமான தண்ணீரையும் இரண்டாவதில் சாராயத்தையும் நிறைத்தார். பின்னர் ஒரு மண்புழுவை எடுத்து தண்ணீர் நிறைந்த குப்பியில் போட்டார். அந்த மண்புழு நீரில் அங்குமிங்கும் நீந்தி மகிழ்ந்தது. மற்றொரு மண்புழுவை எடுத்து சாராயம் இருந்த குப்பியில் போட்டார். அது ஒருமுறை துடித்தது; பின்னர் பல துண்டுகளாயிற்று. கடைசியில் அது பொடிப்பொடியாகி மறைந்தது. உடல் கரைந்து போயிற்று. அனைவரும் இதைக் கண்டு பேச்சிழந்து அமர்ந்திருந்தனர். மது அருந்துவதால் விளையும் தீமைகளைக் குறித்து இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும் என மருத்துவர் கருதினார். அவர் அங்கிருந்தவர்களை நோக்கி, "இந்தப் பரிசோதனையிலிருந்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்?" என்று கேட்டார். உடனே, குடிமயக்கத்தால் நேராக நிற்கக் கூட முடியாத ஒரு குடிகாரன் எழுந்து நின்று உரத்த குரலில், "எல்லோரும் குடியுங்கள்! பார்த்தீர்களா, குடித்தால் வயிற்றிலுள்ள புழுவெல்லாம் செத்துவிடும்" என்றான்.
Thursday, April 8, 2010

ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கே உரிய தனிச் சிறப்பு உண்டு. பாரதத்தின் சிறப்பும், உயர்வும் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்வாகும். எடுப்பதில் அல்ல, கொடுப்பதில் தான் இன்பம்; அடைவதில் அல்ல; துறப்பதில் தான் ஆனந்தம் என்ற உண்மையை உலகிற்கு எடுத்து ஓதிய அவதாரங்களும், மகான்களும், ரிஷிகளும், முனிவர்களும் தோன்றிய புனித பூமி இது.
பாரதம் ரிஷிகளின் நாடு. உலகிற்கு எந்தக் காலத்திலும் நன்மையையும், புகழையும் அளிக்கும் பண்பாட்டையே ரிஷிகள் நமக்குத் தந்திருக்கிறார்கள். அந்தப் பண்பாடே நமக்கு அன்னை. அதை நாம் காப்பாற்றி வளர்க்க வேண்டும். "மாத்ரு தேவோ பவ (அன்னையைத் தெய்வமாக மதி) பித்ரு தேவோ பவ (தந்தையைத் தெய்வமாக மதி) ஆசார்ய தேவோ பவ (குருவைத் தெய்வமாக மதி) என்பதே நமது முன்னோர்கள் நல்கிய உபதேசம். இந்த அன்பு தான் சமூகத்தை ஒன்றாக இணைக்கும் சங்கிலி. அந்த சங்கிலி இன்று உடைந்து ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தீவாக மாறும் காட்சியையே நாம் இன்று கண்டு வருகிறோம்.
Tuesday, April 6, 2010
♥♠♥ சிந்தனைக்கதை: இதய மலர் ♥♠♥
Monday, April 5, 2010
Sunday, April 4, 2010
மாதா அமிர்தானந்தமயிக்கு கெளரவ டாக்டர் பட்டம்
கொச்சி,ஏப். 1: ஆன்மிகவாதி மாதா அமிர்தானந்தமயிக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் கெüரவ டாக்டர் பட்டம் வழங்க முன்வந்துள்ளது.நியூயார்க்கில் உள்ள "ஸ்டேட் யூனிவர்சிட்டி ஆப் நியூயார்க்' பல்கலைக்கழகம் இந்த கெüரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறது. உலகம் முழுவதும் அவர் ஆற்றி வரும் மனிதாபிமான சேவையைப் பாராட்டி இந்த டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்தத் தகவலை பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறையின் தலைவர் பாரத் ஜெயராமன் தெரிவித்தார்.பல்கலைக்கழகத்தில் மே 25-ம் தேதி நடைபெறும் சிறப்புப் பட்டமளிப்பு விழாவில் அவருக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்படுகிறது.இந்த கெüரவ டாக்டர் பட்டம் பெறும் முதல் இந்தியர் மாதா அமிர்தானந்தமயி என்பது குறிப்பிடத்தக்கது.164 ஆண்டு பாரம்பரியம் கொண்ட இந்தப் பல்கலைக்கழகம், இதுவரை உலக அளவில் 2 தலைவர்களுக்கு மட்டுமே கெüரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது.திபெத் ஆன்மிக தலைவர் தலாய் லாமா அதில் ஒருவர்.அண்மையில் ஹைதியில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டியவர்களில் மாதா அமிர்தானந்தமயியும் ஒருவர் என்று அமிர்த விஸ்வ வித்யா பீட பல்கலைக்கழக இணை வேந்தர் அபயஅமிர்தா சைதன்யா, துணை வேந்தர் வெங்கட் ரங்கன் ஆகியோர் தெரிவித்தனர்.




