Friday, April 23, 2010

இறைவனை அடைக்கலமடையாத வாழ்க்கை, நீதிபதி இல்லாமல் இரு சட்டத்தரணிகள் வாதாடுவது போன்றதாகும். வாதம் எந்த முடிவையும் அளிக்காது. வாதத்திற்கு தீர்ப்பு எழுத வேண்டுமெனில் நீதிபதி தேவை. நீதிபதி இல்லாமல் வாதம் நடந்தால், வாதத்தைத் தொடரலாமே அன்றி தீர்ப்பு அளிக்க முடியாது. இறை குணங்கள் நம்மிடம் வளர்வதற்காகவே இறைவனை வணங்குகின்றோம். நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும் இறைவன் என்பது மெய்ப்பொருளாகும். அந்த மெய்ப்பொருளை நாம் ஏற்றுக்கொண்டாலும், இல்லாவிட்டாலும் அதற்கு ஒரு குறையும் ஏற்படாது. புவியீர்ப்பு சக்தி உண்மையாகும். அதை நாம் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், அது இல்லாமல் போவதில்லை. அதே சமயம் அதை மறுத்து, உயரத்திலிருந்து கீழே குதிக்கும் போது ஏற்படும் விபத்தின் மூலம் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டி வரும். இதுபோல உண்மைக்கு எதிரான முகத்தைத் திருப்பிக்கொள்வது, கண்களை மூடிக்கொண்டு "இருட்டு" என்று கூறுவதாகும். இறைவன் என்ற மெய்ப்பொருளை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை முறைப்படுத்துவதன் மூலம் அல்லல் அற்ற வாழ்க்கை வாழ முடியும்.

No comments:

Post a Comment