Sunday, April 11, 2010

சிந்தனைக்கதை:எத்தனை பேர்?

ஒருநாள் ஒட்டகக் குட்டி ஒன்று தனது தந்தையைப் பார்த்து சில கேள்விகளைக் கேட்டது. "அப்பா, நம் முதுகில் திமில் இருப்பதன் காரணம் என்ன?"
"மகனே! அதில் சேர்த்து வைக்கப்படும் கொழுப்பானது நாம் பாலைவனங்களில் சஞ்சரிக்கும் போது நமது உடல்நிலையைப் பேண உதவுகிறது."
"நல்லது தந்தையே! நமது கண்களின் மீது மிக நீண்ட இமைகள் இருப்பதன் கரணம் என்ன?"
"பாலைவனத்தில் மணல்க்காற்று வீசும் போது மணல்துகள்கள் நம் கண்களில் விழுந்துவிட வாய்ப்புண்டு. நீண்ட கண் இமைகள் நாம் இதனால் குருடாகிவிடாமல் காக்க உதவுகின்றன."
"நன்றி தந்தையே! நமக்கு பரந்து விரிந்த சதையுள்ள கால்கள் இருக்கக் காரணம் என்ன?"
"பாலைவனத்தில் உள்ள மணல் மிகவும் மென்மையானது. அதில் கால்கள் புதைந்துவிடாமல் நடக்க இவை உதவுகின்றன."
இந்த பதில்களால் வியப்பிலாழ்ந்த குட்டி ஒட்டகம் தந்தையைப் பார்த்து கேட்டது "மிகவும் நன்றி தந்தையே! அப்படியானால் இந்த மிருகக்காட்சிச்சாலையில் நாம் என்ன செய்கிறோம்?"
மனிதர்களாகிய நாம்;  நமது தெய்வீக இயல்பை அறிந்து கொள்வதற்கான எல்லா வழிகளையும் அறிந்திருக்கிறோம்.     ஆனால்   நமது விருப்பு, வெறுப்பு என்ற கூண்டிற்குள் அடைபட்டுக் கிடக்கிறோம். விடுதலையை வேண்டுவோர் எத்தனை பேர்?!

No comments:

Post a Comment