Wednesday, May 26, 2010

Amma RECEIVES DOCTORATE OF HUMANE LETTERS FROM SUNY Amma receives doctorate of humane letters from SUNY


25 May 2010
Buffalo, New York
The State University of New York (SUNY) presented spiritual leader and humanitarian Sri Mata Amritanandamayi Devi (Amma) with an honorary doctorate in humane letters at a special ceremony held at 2 p.m. on May 25 at Lippes Concert Hall in Slee Hall on the University at Buffalo North Campus.
SUNY bestowed the doctorate upon Amma in recognition of her tireless efforts on behalf of global peace, for her commitment to education and for the far-reaching impact of her charitable organizations in relieving poverty and human suffering in India and around the world.
Addressing the gathering, President Dr. John B. Simpson, the President of the University at Buffalo (State University of New York), said, “Through this conferral, we pay tribute to the far-reaching contributions of a distinguished educational leader, prominent humanitarian and esteemed spiritual leader. Through her leadership of Amrita University as well as through her humanitarian work, Chancellor Amma exemplifies the value of international dialogue and dedicated public service in the global arena. These are values at the core of the University at Buffalo’s mission as an internationalized public university seeking to prepare our students to contribute meaningfully to the global world.”
As part of the award ceremony, Amma delivered an address on education, in which she discussed the importance of including universal spiritual values in core curricula, the role of meditation in developing and gaining control over the mind, and the complimentary relationship of scientific knowledge and spiritual wisdom, among other topics.
Amma said, “It is Amma’s prayer that we develop the expansive-mindedness to embrace both scientific knowledge and spiritual wisdom. We can no longer afford to see these two streams of knowledge as flowing in opposite directions. In truth, they compliment one another. If we merge these streams, we will find that we are able to create a mighty river—a river whose waters can remove suffering and spread life to all of humanity.”
Other dignitaries to address the gathering included Dr. Satish K. Tripathi, Provost of University at Buffalo, and Dr. Stephen Dunnett, University at Buffalo, Vice-Provost for International Education.
SUNY is a renowned public university with 64 campuses across the state of New York. Its four main centers are in Albany, Binghamton, Buffalo and Stonybrook. Its total student body is 440,000 students.
Others receiving honorary doctorates from SUNY this year include MapQuest founder Barry Glick, pioneering AIDS/HIV- researcher Dr. Robert Vince, and Pulitzer Prize-winning composer Steve Reich.

Friday, May 21, 2010

சந்தனத்தின் மகிமை


ஆசாரங்களை அனுஷ்டிக்கும் இந்துவுக்கு சந்தனம் மிகவும் புனிதமான பொருள். தெய்வ பூஜைக்கு சந்தனம் இன்றியமையாததாகும். பித்ரு கர்மங்களிலும் இது உபயோகிக்கப்படுகிறது. பகவான் ஸ்ரீகிருஷ்ணரை நினைக்கும் போது அவருடைய சந்தனம் பூசிய கார்மேக மேனி எழில் நம் நினைவுக்கு வருகிறது. லலிதா சஹஸ்ர நாமம் தேவியை சந்தனக் குழம்பு சார்த்திய அங்கங்களை உடையவள் "சந்தனத்ரவதிக்தாங்கீ"என்று சொல்கிறது: இவ்விதம் எல்லாத் தெய்வங்களுடனும் சந்தனம் தொடர்புள்ளதாகும்: குளிர்ச்சிக்கு மறுபெயர் எனத் திகழும் சந்தனத்திற்கு இந்து கலாச்சாரத்தில் முக்கியமான இடம் அளிக்கப்பட்டுள்ளது. மிகவும் குளிர்ச்சியும், நறுமணமும் உள்ள சந்தனத்தின் மகிமையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. மதச் சடங்குகளிலும், வரவேற்பு போன்ற நல்ல முகூர்த்தங்களிலும் சந்தனம் கொடுப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது நம்முடைய அனுஷ்டானத்தின், ஆன்மிகத்தின் மற்றும் சுய நம்பிக்கையின் சின்னமாகும். இதற்கு அறிவியல் பூர்வமான மகிமையும் உண்டு. நோய்க்கிருமிகள், தோல் வியாதிகள் போன்றவற்றை அழிப்பதும், குளிர்ச்சி அளிப்பதும், இதயத்திற்கு நலன் அளிப்பதும், நாவின் ருசியின்மையை அகற்றுவதும், பித்தத்தை முறைப்படுத்துவதும் சந்தனத்தின் குணங்களாகும் என்று ஆரோக்கிய சாஸ்திரம் கூறுகிறது. பலம், நிறம், உடல் நலம், நல்ல மன உணர்வு, ஐஸ்வர்யம் ஆகியவற்றை சந்தனம் அளிப்பதாகவும் கூறப்படுகிறது. பகவானுக்கு சந்தனம் சார்த்திய பிறகு பக்தன் அதை தனது நெற்றியில் வைத்துக் கொள்கிறான். மருத்துவ குணங்கள் உள்ள சந்தனத்தை அணிவது நமது உடலுக்கு நன்மை பயக்கும். அதனால்தான் ஆலயங்களிலும், வீடுகளிலும் பூஜை சமயங்களில் இதை கட்டாயமாக உபயோகிக்கின்றனர். மரணத்திற்குப் பின் இறுதிக் கிரியை செய்யும் பொழுது சந்தனக்கட்டை(சிறிய துண்டாவது) உபயோகிப்பது வழக்கம். எங்கும் நறுமணம் பரப்பி, அனைவருக்கும் குளிர்ச்சி நல்கும் சந்தனம் நமக்கு ஒரு வகையில் முன்னுதாரணமாகவும் திகழ்கிறது. சந்தனத்தை தண்ணீருடன் சேர்த்து அரைத்து பகவானுக்கு சமர்ப்பிப்பதன் மூலம் நம்முடைய சமர்ப்பன மனோபாவம் வெளிப்படுகிறது. சந்தனம் தான் தேய்ந்து பிறருக்கு மணம் பரப்புகிறது.

Monday, May 17, 2010

விபூதியின் மகிமை


நெற்றியில் திலகம் அணிவது இந்துக்களின் தினசரி வழக்கமாகும். நம்மைப் பொறுத்தவரை அது ஆசாரமாகும். நம்முடைய பண்பாட்டின் சின்னமாகும். விபூதி, குங்குமம், சந்தனம், கோரோசனை, சாந்து, மை போன்ற நெற்றியில் அணியும் பலபொருட்கள் உள்ளன. பரிசுத்தமான விபூதியை நெற்றியில் அணிவது மிகவும் சிறப்பு. பரமசிவனின் நெற்றியிலுள்ள ஞானக்கண்ணை குறிப்பதற்காகவே நாம் நெற்றியில் திலகம் அணிகிறோம். உலர்ந்த பசுவின் சாணியில் பச்சைக் கற்பூரத்தை சேர்த்து சுட்டெடுத்தால் சுத்தமான மணமுள்ள விபூதி கிடைக்கும். நோயை நீக்கவும், பாபத்தைப் போக்கவும், தீய கனவுகளை அகற்றவும் விபதி அணிதல் உதவும். நெற்றியில் மூன்று வரிகளாக விபூதி அணிய வேண்டும். இம்மூன்று வரிகளும் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வரியம் ஆகியவற்றைக் குறிப்பிடுபவை ஆகும். நெற்றியில் மட்டுமன்றி கழுத்திலும், மார்பிலும், தொப்புளுக்கு மேலேயும், கை முட்டிகள், கால் முட்டிகள், முதுகு ஆகிய இடங்களில் விபூதி அணிதல் சிறப்பாகும். விபூதி அணியும் போது சிவ பஞ்சாட்சரம், காயத்ரி மந்திரம் போன்ற மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபிப்பது உத்தமம். விபூதி முதலான மங்களச் சின்னங்களை அணிந்து மங்களமாக வாழ்வோம்.

Sunday, May 16, 2010

Tuesday, May 11, 2010

விதியும் சமர்ப்பணமும்

எவ்வளவு இறை நம்பிக்கை இருந்தாலும், நம்பிக்கை ஆட்டம் காணும் சந்தர்ப்பங்கள் வரும். ஒரு சாதாரண இல்லறவாசிக்கு. நம்பிக்கை என்பது கயிறுமேல் நடப்பது போன்றது ஆகும். நிம்மதியின்மையின் கரையில்தான் நாம் அனைவரும் வசிக்கின்றோம். சுற்றிலும் வேதனைக்குரல்கள்; கஷ்டப்படுபவரின் அழுகுரல்கள், பசிக்கும் போது என்றோ குடித்த கஞ்சியை நினைத்து ஏங்கும் குழந்தைகளின் ஏழ்மை, நோயினால் அவதிப்படுவோர். இவற்றிற்கிடையில் தான் மனித பலவீனங்களை விற்று பணம் சம்பாதிக்கத் துடிக்கும் ஒரு மக்கள் கூட்டம். வீடு பற்றி எரியும் போது அதன் தூணை எடுக்க முயற்சி செய்பவர்கள் இவர்கள். தாயத்து கட்டினால் நினைத்ததெல்லாம் நடக்கும், ஹோமம் செய்தால் எல்லா துன்பங்களும் அகலும் என அற்புதமான மந்திர பலன்களை இவர்கள் வாக்குக் கொடுக்கிறார்கள். அற்புதமான மாற்றங்களை எதிர்பார்த்து வாடும் பரிதாபமான மனிதர்கள், இவர்களது வலையில் விழுகிறார்கள். பட்டினியும், கர்மவினையும் அனுபவிப்பவர்களைக் குறை சொல்வதால் பயனில்லை. அதே சமயம், பெரும்பாலோர் விதி என்று சொல்லி வருந்துகிறார்கள். கரை ஏறுவதற்கு உள்ள உண்மையான வழி எது என்று தேடுவதில்லை. அப்படியே அதை அறிந்தாலும் நம்புவதில்லை. நம்பினாலும் அதில் உறுதியாக நிற்பதில்லை. எல்லோரும் தற்காலிக பலனையே தேடுகிறார்கள். உடனடி மு ன்னேற்றம். பொறுமையோ, முயற்சியோ இல்லை. குறுக்கு வழிகளை பின்பற்றவே ஆர்வம். விளம்பரத்தைக்கண்டு மயங்கி, துயரக்கடலைக் கடக்க விரும்புபவர்கள். கர்மபலனைக் கர்மத்தால் தடுக்கலாம். ஒரு கல்லை மேலே வீசிவிட்டு கீழே விழுவதற்கு முன்பு பிடிக்கலாம் அல்லவா? அதுபோல் இடையிலேயே கர்மபலனின் போக்கை மாற்றலாம். விதியை நினைத்து துன்புற வேண்டிய அவசியமில்லை. இறை சங்கல்பத்திட்கு முன்னால் ஜாதக பலன் மாறிவிடும். பகவானிடம் அனைத்தையும் சமர்ப்பித்து விடுங்கள் அவர் நம்மைக் காப்பார். ஆத்மசமர்ப்பணமே விதியை வெல்வதற்கான ஒரே வழி. அனைத்தையும் மறந்து செய்யப்படும் பிரார்த்தனைக்கு பணச்செலவு இல்லை என்பது மட்டுமல்ல, சரியான அளவற்ற முன்னேற்பாடும் தேவையில்லை. ஆயிரக்கணக்கில் செலவழித்து நடத்தும் ஹோமங்களும், காப்பு கவசங்களும் சுயநலத்திற்காக ஆகும் போது அது எந்த அளவு உயர்வு பொருந்தியது என்பது கூறாமலே புரியும். குறுக்குவழிகளைத் தேடாமல், புலனடக்கத்துடன் இறைவனை நாட வேண்டும். தனது திறமைக்கும், நம்பிக்கைக்கும், ஆசாரத்திற்கும் ஏற்ப பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளைச் செய்யலாம். உண்மையில் நாம் பேராசையத்தான் கட்டுப்படுத்த வேண்டும். தனது சூழ்நிலையைப் புரிந்து கொண்டு சம சித்தத்துடன் வாழ முடிந்தால் மனநிம்மதி கிடைக்கும். ஆத்மசமர்ப்பணத்தின் நற்பலன் தானே தேடிவரும். மாறாக, எளிய வழியைத் தேடி போகாத வழிகளில் போனால் விபரீத பலனே விளையும். துக்கமும், நிராசையும் மேலும் அதிகரிக்கும். அதனால் இறைவனின் பாதார விந்தங்களே சரணம் என்ற நம்பிக்கை உறுதியாக வேண்டும் எனும் பிரார்த்தனை தேவை. சரணாகதி மனப்பான்மை தான் ஒருவனது ஆன்மீக வாழ்வின் அடித்தளமாகும்.       ---♥♥♥---

Monday, May 3, 2010

மதமாற்றம் அவசியமா?
மதங்கள் மனிதனின் படைப்பாகும்: ஒரு மதத்தையும் ஸ்ரீராமரும்; ஸ்ரீகிருஷ்ணரும், கிறிஸ்துவும் உருவாக்கவில்லை. ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்த, வேறுபட்ட நிலையிலிருந்த மக்களை முன்னேற்றுவதற்கு அங்கங்கே தோன்றிய மகான்களினாலும், அவதாரங்களினாலும் அருளப்பட்ட உபதேசங்களை பின்பற்றிய சீடர்களே பிற்காலத்தில் அவற்றை ஒவ்வொரு மதமாக உருவாக்கினர். மக்களின் கலாச்சாரங்களும், தேவைகளும் வேறுபட்டவையாக இருந்த காரணத்தால் பல மதங்கள் தோன்றின.ஒவ்வொரு மதமும் அதற்கே உரிய தனித்தன்மையுடன் திகழ்கிறது. பொருளற்ற மதம் என்று எதுவும் இல்லை. இந்த உண்மையைப் புரிந்துகொண்டால், அனைவரையும் "எனது" மதத்தில் சேர்க்கவேண்டும் என்ற பகுத்தறிவற்ற சிந்தனை நம் மனதிலிருந்து அடியோடு நீங்கிவிடும்.
ஆன்மிகமே மதத்தின் உயிர்நாடி. ஆசாரங்களும், நம்பிக்கையும் அதன் மேல்தோலாகும். ஆன்மிகம் என்பது ஒவ்வொருவரும் "நான் யார்" என்பதை உணர்வதாகும். தன்னை அறிபவனே உண்மையான மதநம்பிக்கை உள்ளவன். தன்னை அறியும் ஆன்மிகப் பாதையில் முன்னேறுபவன் மத ஆசாரங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபகிறான். நாம் அனைவரும் ஒரே மெய்ப்பொருளே. அது சாந்தியாகும்; அன்பாகும். அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றே. இங்கே பயம், வெறுப்பு, போட்டி ஆகியவை தேவையே இல்லை. வேறுபாடுகள் எல்லாம் மேல்மட்டத்தில் காணப்படுபவை. மெய்ப்பொருளை அறிந்தவர் மனதில் வேறுபாடுகள் எதுவும் இல்லை. வேறுபாடுகள் காணப்படும் இடத்தில் ஆத்மானுபூதி இல்லை. மனிதனின் மனம் மதம் என்னும் பிணைப்பிலிருந்து விடுபடுகிறது. மதம் எதுவாக இருப்பினும், ஆன்மிக தத்துவங்களை புரிந்துகொண்டால் அந்த மதத்தை அனுஷ்டித்தவாறே யாரும் இலட்சியத்தை அடைய முடியும். உதாரணமாக கிருஷ்ணனை வணங்கினாலும், கிறிஸ்துவை வணங்கினாலும், அல்லாவை வழிபட்டாலும் அனைத்திலும் அடிப்படையில் பக்தி மார்க்க தத்துவமே பின்பற்றப்படுகிறது. நாம ரூபங்கள் முக்கியம் அல்ல. இதயத் தூய்மையும், சமர்ப்பண மனோபாவமும் தான் முக்கியம்.
மெய்ப்பொருளை அறிவதற்கு ஒவ்வொருவருக்கும் தான் விரும்பும் பாதையைப் பின்பற்றும் உரிமையும், சுதந்திரமும் உண்டு. ஒருவரின் நம்பிக்கையைக் குலைப்பது மிகப்பெரிய பாபமாகும். ஒருவரின் நம்பிக்கையைக் குலைத்தால் பின் அவரிடத்தில் மற்றொரு நம்பிக்கையை வளர்ப்பது எளிதான செயலல்ல.அறியாமை மற்றும் தவறாகப் புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றின் அடிப்படையில் பாதையைத் தேர்ந்தெடுப்பது கூடாது. அதற்கு முதலில் அவரவர் பிறந்து, வளர்ந்த மதத்தைப் பற்றிய அறிவும், ஆன்மிகம் என்றால் என்ன என்ற அறிவும் தேவை. தூண்டுதலாலோ, பேராசையாலோ மதம் மாறும் பலரால் பழைய நம்பிக்கைகளை முற்றிலும் கைவிட முடிவதில்லை. அவர்கள் மனதில் குற்ற உணர்வு உண்டாகும். பழைய மத நம்பிக்கை குலைந்தும், புதிய மத நம்பிக்கை உறுதியற்றும் இருக்கும். அது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் குடும்பங்கள் சிதைந்து போகின்றன. மெய்ப்பொருளை அறிவதற்கான பாதைகள் என்ற நோக்கத்துடன் ஆரம்பித்த மதங்கள் பின்னர் இயக்கங்களாக மாறிய போது, இயக்கத்தின் வலிமையைக் காப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. மதத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதில் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. தங்கள் அதிகாரம், தலைமை ஆகியவற்றை நிலை நிறுத்துவதற்கு உரிய ஸ்தாபனங்களாக இயக்கங்கள் மாறிவிட்டன. அவர்கள் மதத்தின் தத்துவங்களுக்கு தங்கள் விருப்பப்படி விளக்கமளித்தனர். பெரும்பாலும் அவற்றைப் பிறர் மீது திணிக்க முயன்றனர்.
இவ்வாறு மனிதனை முக்தியை நோக்கி அழைத்துச் செல்வதற்காக தோன்றிய மதங்கள் அவனைப் பிணைக்கும் சங்கிலியாக மாறிவிட்ட காட்சியையே நாம் காணுகின்றோம். உலகில் சாந்தியையும், சமாதானத்தையும் வளர்க்க வேண்டிய மதங்களே உலகில் ஏற்பட்ட பல போருக்கும், போராட்டங்களுக்கும் காரணமாக அமைந்தன.
நாம் எந்த மதத்தை நம்புகிறோமோ அதில் இருந்தவாறே ஆன்மிகத்தில் முன்னேற முயற்சி செய்ய வேண்டும். பிறரையும் அவர்கள் விருப்பப்படி நடந்துகொள்ள அனுமதிக்க வேண்டும். அது தான் தார்மீகமான முறை. கிறிஸ்து, "உன்னைப் போல் உன் அயலானையும் நேசி." என்றே உபதேசித்தார். அதை வாழ்வில் பின்பற்றினால் சமூகத்தில் உள்ள பிரச்சினைகள் பல நீக்கி விடும். அயலானான கிறிஸ்தவனை மட்டும் நேசிக்க வேண்டும் என்று கிறிஸ்து கூறவில்லை. அயலான் என்பதில் எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவார்கள். இதைப் புரிந்துகொள்ளும் அளவு பரந்த மனம் இல்லையெனில் மதத்தால் பெறும் பயன் தான் என்ன? நாமனைவரும் மதங்களின் இதயமாக உள்ள நோக்கத்தை அறிந்து, அன்பு, ஒற்றுமை, பரஸ்பர மரியாதை எனும் புதுயுகத்தை நோக்கிக் காலெடுத்து வைக்கவே இனி முயற்சிக்க வேண்டும்.
இந்து மதம் யாரையும் எதிர்ப்பதில்லை. யாரும் தங்கள் மதத்தையோ, நம்பிக்கையையோ விட்டுவிட வேண்டுமென்று கூறவுமில்லை. அது மட்டுமல்ல,ஒருவரது நம்பிக்கையைக் கெடுப்பதை அதர்மமாகவும் அது கருதுகிறது. எல்லா மதங்களையும் ஒரே இலட்சியத்தை அடைவதற்கான பலவித மார்க்கங்களாகவே அது கருதுகிறது. சனாதன தர்மம் வாழ்வின் முழுமையான நிர்வாகவியல் சாஸ்திரமாகும்.அது மனித குலத்தின் ஆன்மிக நலனிற்கும், மற்றும் உலகியல் நலனிற்கும் வழிவகுக்கும்.