Monday, May 17, 2010

விபூதியின் மகிமை


நெற்றியில் திலகம் அணிவது இந்துக்களின் தினசரி வழக்கமாகும். நம்மைப் பொறுத்தவரை அது ஆசாரமாகும். நம்முடைய பண்பாட்டின் சின்னமாகும். விபூதி, குங்குமம், சந்தனம், கோரோசனை, சாந்து, மை போன்ற நெற்றியில் அணியும் பலபொருட்கள் உள்ளன. பரிசுத்தமான விபூதியை நெற்றியில் அணிவது மிகவும் சிறப்பு. பரமசிவனின் நெற்றியிலுள்ள ஞானக்கண்ணை குறிப்பதற்காகவே நாம் நெற்றியில் திலகம் அணிகிறோம். உலர்ந்த பசுவின் சாணியில் பச்சைக் கற்பூரத்தை சேர்த்து சுட்டெடுத்தால் சுத்தமான மணமுள்ள விபூதி கிடைக்கும். நோயை நீக்கவும், பாபத்தைப் போக்கவும், தீய கனவுகளை அகற்றவும் விபதி அணிதல் உதவும். நெற்றியில் மூன்று வரிகளாக விபூதி அணிய வேண்டும். இம்மூன்று வரிகளும் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வரியம் ஆகியவற்றைக் குறிப்பிடுபவை ஆகும். நெற்றியில் மட்டுமன்றி கழுத்திலும், மார்பிலும், தொப்புளுக்கு மேலேயும், கை முட்டிகள், கால் முட்டிகள், முதுகு ஆகிய இடங்களில் விபூதி அணிதல் சிறப்பாகும். விபூதி அணியும் போது சிவ பஞ்சாட்சரம், காயத்ரி மந்திரம் போன்ற மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபிப்பது உத்தமம். விபூதி முதலான மங்களச் சின்னங்களை அணிந்து மங்களமாக வாழ்வோம்.

No comments:

Post a Comment