Friday, April 9, 2010

மனோபாவம்

ஒருமுறை மருத்துவர் ஒருவர் கிராமத்திற்குச் சென்று, மது அருந்துவதால் விளையும் தீமைகளைத் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தத் தீர்மானித்தார். கிராமத்திலிருந்த குடிகாரர்களை ஒன்றாகக் கூட்டினார். அவர்களுக்கு மதுவால் விளையும் தீமைகளைக் குறித்து உணர்த்த பலவற்றைக் கூறிப் பார்த்தார். தனது முயற்சி நினைத்த அளவு பலனளிக்கவில்லை என்பதை அறிந்து, ஒரு பரிசோதனையின் மூலம் புரியவைக்கத் தீர்மானித்தார். அவர், இரண்டு கண்ணாடிக் குப்பிகளை எடுத்தார். ஒன்றில் சுத்தமான தண்ணீரையும் இரண்டாவதில் சாராயத்தையும் நிறைத்தார். பின்னர் ஒரு மண்புழுவை எடுத்து தண்ணீர் நிறைந்த குப்பியில் போட்டார். அந்த மண்புழு நீரில் அங்குமிங்கும் நீந்தி மகிழ்ந்தது. மற்றொரு மண்புழுவை எடுத்து சாராயம் இருந்த குப்பியில் போட்டார். அது ஒருமுறை துடித்தது; பின்னர் பல துண்டுகளாயிற்று. கடைசியில் அது பொடிப்பொடியாகி மறைந்தது. உடல் கரைந்து போயிற்று. அனைவரும் இதைக் கண்டு பேச்சிழந்து அமர்ந்திருந்தனர். மது அருந்துவதால் விளையும் தீமைகளைக் குறித்து இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும் என மருத்துவர் கருதினார். அவர் அங்கிருந்தவர்களை நோக்கி, "இந்தப் பரிசோதனையிலிருந்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்?" என்று கேட்டார். உடனே, குடிமயக்கத்தால் நேராக நிற்கக் கூட முடியாத ஒரு குடிகாரன் எழுந்து நின்று உரத்த குரலில், "எல்லோரும் குடியுங்கள்! பார்த்தீர்களா, குடித்தால் வயிற்றிலுள்ள புழுவெல்லாம் செத்துவிடும்" என்றான்.

குழந்தைகளே! கேட்கும் விடயத்தை சரியாகப்புரிந்துகொள்ளக் கூடிய களங்கமற்ற மனமே தேவை. களங்கமற்ற தூய இதயம் இருந்தால் அனைத்திலும் நல்லதைக் காண முடியும்.

1 comment:

  1. flowrs are nice in ur blog..keep it up.

    regard
    ram
    www.hayyram.blogspot.com

    ReplyDelete