Thursday, June 9, 2011

உலகில் அன்பும், பேரன்பும் இருக்கின்றன. நீங்கள் உங்களுடைய குடும்பத்தினர் மீது அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால் அண்டை வீட்டார் மீது அன்பு காட்டுவதில்லை. உங்கள் பெற்றோர் மீது அன்பு காட்டுகிறீர்கள் . ஆனால் அதேமாதிரி அனைவர் மீதும் அன்பு காட்டுவதில்லை. உங்கள் மதத்தின் மீது அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால் எல்லா மதங்களின் மீதும் அன்பு காட்டுவதில்லை. பிற மதத்தவரை வெறுக்கக்கூடச் செய்கிறீர்கள். உங்கள் நாட்டின் மீது அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால் எல்லா நாடுகளின் மீதும் அன்பு காட்டுவதில்லை. இது நிஜமான பேரன்பாகாது. இது குறுகிய அன்பாகும். இந்த குறுகிய அன்பை தெய்வீகப் பேரன்பாக மாற்றுவதே ஆன்மீகத்தின் இலச்சியமாகும். இந்த பேரன்பின் நிறை நிலையில் அழகிய, நறுமணமிக்க  கருணை என்னும் மலர் மலர்கிறது. 
அன்பே சிவம்!!

No comments:

Post a Comment