Friday, March 26, 2010


அம்மா! கனவுக்குச் சமமான இந்தப் பிரபஞ்ச நாடகம் நடக்கும் சிறிய மேடையில் நான் ஏற்று நடிக்க வேண்டிய பாத்திரம் இதுவாக இருக்கக் கூடும். இவ்வுலகிலுள்ள உறவுகளும், பந்தங்களும் பொய்யானவை. உனது பிரேமையே மெய்யானது அம்மா! பதவியும் செல்வமும் நிச்சயம் நீங்கிவிடும். உன்னோடு உள்ள தொடர்பு மட்டுமே என்னை விட்டு நீங்காது. அம்மா!தரிசனம் தந்தருள்க!! பிறவிக் கடலிலிருந்து என்னைக் காத்தருள்க! தேவி!  அம்மா! ஆசைகள் என்னும் எதிரிகளை நீக்கி துன்பத்தையும் துயரத்தையும் ஓட்டிடுவாய்.  உனது புன்னகை கடாட்சத்தால் பந்தங்களை அறுத்து நித்திய சாந்தி எனும் கரையை அடையச் செய்து விடு அம்மா!

No comments:

Post a Comment