இந்து மதத்தில் சாதிப்பிரிவினை இல்லை. வர்ண வேறுபாடே உள்ளது. ஹிந்து தர்மம் ஜாதிபேதத்திற்கு இடமளித்த தர்மமென்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது. உபநிஷதங்களிலும், கீதையிலும் வர்ணங்களைப் பற்றியே விவரிக்கப்படுகிறது. ஒரு ஜீவாத்மா தனது தகுதிக்கு ஏற்ற ஒரு பிறவியை எடுக்கிறது. அப்படி எடுத்த பிறவியே வர்ணம் ஆகும். அது ஜீவாத்மாவின் மன அமைப்பிற்கேற்ப அதற்கு கிடைக்கும் சூழ்நிலைகளைக் காட்டுகிறது. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வர்ணங்கள் ஜீவாத்மாவின் மனதின் குணங்களையே குறிப்பிடுகின்றன. தவத்தின் மூலம் தனது மனநிலையை மாற்றினால் ஒரே பிறவியிலேயே பிற வர்ணங்களில் இடம்பிடிக்க ஒருவருக்கு இயலும். புராண, இதிகாசங்களிலும், வரலாற்றிலும் இதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு.

No comments:
Post a Comment