Friday, June 22, 2012

பாவியேன் இனிஎன் செய்கேன்
பரமனே! பணிந்து உன் பாதம்
சேவியேன் விழிநீர் மல்கச் 
சிவசிவ என்று தேம்பி
ஆவியே நிறைய வந்த
அமுதமே என்னேன்; அந்தோ
சாவிபோம் சமயத்து ஆழ்ந்து
ஜகத்திடைத் தவிக்கின் றேனே!
- தாயுமானவ சுவாமிகள்

No comments:

Post a Comment