Monday, June 4, 2012



நமது ஜீவனின் ஏழு மையங்கள்
- ஸ்ரீ அரவிந்தர்



1) ஆயிரமிதழ்த்தாமரையென்னும் சகஸ்ரதல மையம் - தலையுச்சியில்.
2) நெற்றியின் நடுவில் - அஜ்ன சக்கரம் - (சங்கற்பம், திருஷ்டி, செயலாற்றும் மனம்).
3) தொண்டையின் பின்னிருக்கும் மையம் - வெளிப்படுத்தும் மனம்.
4) இதய கமலம் - உளவுணர்ச்சி மையம். இதன் பின்னே சைத்திய புருஷன் இருக்கிறது.
5) நாபி - மேல் பிராணன்.
6) நாபிக்குக் கீழுள்ள மையம் - கீழ்ப்பிராணன்.
7) மூலாதாரம் - தூல ஜீவன்.

இந்த மையங்களனைத்தும் உடலின் நடுவிலிருக்கின்றன. அவை முதுகுத் தண்டுவடத்துடன் பிணைந்திருப்பதாகக் கூறுவர். ஆனால், உணர்வு விழிக்கும்போது இவற்றின் இயக்கங்கள் தூல உடலில் நடப்பதாகத் தோன்றிய போதிலும் - உண்மையில் இவை சூக்கும தேகமென்னும் நுண்ணுடலில் இருக்கின்றன.

No comments:

Post a Comment