மனித சமுதாயத்தின் துன்பத்தை நீக்கும் மருந்தாக மதம் அமைய வேண்டுமானால் அகங்காரத்தையும், பகைமையையும் வளர்க்கக்கூடாது.
"நான், எனது' என்ற எண்ணம், நம் மனதைப் பற்றுடையதாக்கி, பார்வையை மறைக்கிறது. உண்மையான மதத்தத்துவங்களைக் கடைப்பிடிப்பதால் மட்டுமே அகங்காரம் நீங்கும்.
சுயநலத்தோடு கூடிய அன்பைப் பற்றியே நாம் அறிந்திருக்கிறோம், இந்தக் குறுகிய மனப்பான்மையை ஒழித்து, தெய்வீக அன்பாக மாற்றுவதே மதத்தின் லட்சியமாக இருக்க வேண்டும்.உண்மையான அன்பு முழுமையடையும் போது, அதிலிருந்து அழகான வாசனை கமழும் கருணையாகிய மலர் மலர்கிறது.----Amma----

No comments:
Post a Comment