அன்பினைத் தேடித்தேடி களைத்து நான் உள்ளம் உடைந்து விட்டேன். எட்டாத் தொலைவிலெல்லாம் தேடித்தேடி கண்ணீர் விட்டுக் களைத்தேன். அல்லும் பகலும் அம்மா உன்னை எண்ணி நெஞ்சம் நெகிழ்கிறது. ஈடில்லா உன் அன்பையும், கருணையையும் என் மேல் காட்டு. துன்பங்களை நீக்குபவளே! உனது புன்னகை கடாட்ஷத்தால், ஆசைகள், பந்தங்களை அறுத்துவிட்டு நித்திய சாந்தி எனும் கரையை அடையச் செய்து விடு.

No comments:
Post a Comment