Saturday, August 27, 2011

பிறர்மீது அன்பு காட்டும் மனிதர், நதியைப் போன்றவர். உண்மையான அன்பு எதையும் எதிர்பார்க்காது. அன்புடைய மனிதரிடம் எல்லோரும்  பழக விருப்பம் கொள்வர். அவருடன் உறவாடி இன்புறுவர். நதியில் அனைவரும் நீராடி மகிழ்வதைப் போல, அன்புடைய மனிதரும் எல்லாருக்கும் அன்பை வாரி வழங்குபவராக இருப்பார். அவரிடத்தில் அன்பு பிரவாகமாகிக் கொண்டே இருக்கும். சொர்க்கமும், நரகமும் நம் உள்ளத்தாலேயே உருவாக்கப்படுகின்றன. மனம் நிம்மதியின்றி இருக்கும் போது மகிழ்ச்சியான விஷயம் கூட நம்மை எரிச்சல் அடையச் செய்வதை அறிவோம். ஆனால், உள்ளத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் குடிகொண்டிருக்கும் போது நம்மால் எதையும் ஈடுபாட்டுடன் செய்ய இயலும். அதனால், புறவுலக நிகழ்ச்சிகள் நம் மனதின் போக்கிற்கேற்பவே நம்மை வழிநடத்திச் செல்கின்றன.---அம்மா----

No comments:

Post a Comment