புத்தாண்டை வரவேற்கும் வேளையில், நமது பழைய பண்பாடுகள், ஆசாரஅனுஷ்டானங்கள் போன்றவற்றின் மதிப்பை பெரும்பான்மையோர் மறந்து வருகிறார்கள். பண்டிகைகள் நமது பண்பாட்டின் வெளிப்பாடாக, வயதில் மூத்தவர்களை வணங்குதல், ஆலயங்களுக்கு சென்று இகபரநலன்களை வழங்கும் தெய்வத்திற்கு நன்றி சொல்வது, பகிர்ந்துண்பது, எளிமை போன்றவை நமது வழக்கத்தில் இருந்தவை. இன்றோ, பண்டிகைகள், ஆலயத் திருவிழாக்கள், வீட்டு விஷேசங்கள் என அனைத்திலும் சினிமா, சின்னத்திரை தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. ஆலயங்களுக்குச் சென்று அந்த புனிதமான சூழலில் மனதின் சுமைகளை, தீய சிந்தனைகளை இறக்கி வைத்த காலம் மறைந்து, சினிமா பாடல், குத்தாடம், திரைப்படம் போன்றவை இல்லாத கொண்டாட்டங்கள் அருகி விட்டன. அனைவரும், பழைய பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதுடன், உங்கள் குழந்தைககளுக்கும் அதன் உயர்வை எடுத்துச் சொல்லி, பண்டிகைகள், விஷேசங்களை உண்மையான, பழைய பண்பாடுகள் நிறைந்த பண்டிகைகள் ஆக கொண்டாட முயற்சி செய்யுங்கள். இறைவனின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாகக் கிடைக்கவும், அனைவர் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையவும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்! ---அம்மா , மாத்ருவாணி----

No comments:
Post a Comment