Wednesday, December 11, 2013


அம்மா!  இவனது உதடுகளிலிருந்து உதிரும் சொற்கள் அனைத்தும் உனது மகா மந்திர ஜபமாக வேண்டும். கைகளின் அசைவுகள் அனைத்தும் உன்னைத் துதிக்கும் முத்திரைகளாக வேண்டும். கால்களின் இயக்கம் முழுவதும் உனக்குச் செய்யும் பிரதட்ஷிணமாக வேண்டும். உண்ணும் உணவும், பருகும் நீரும் உனக்குச் செய்யும் ஹோம அர்ப்பணமாக வேண்டும். எந்தன் உறக்கமும் உனக்குச் செய்யும் நமஸ்காரமாக வேண்டும்.  அதிகம் கூறுவானேன் அம்மா; இவனது எல்லாக் கர்மங்களும் ஆத்மார்ப்பணமாக உனது ஆராதனையாக வேண்டும். எல்லாச் செயல்களும், சுகங்கள் அனைத்தும் உனக்குச் செய்யும் பூஜையாக வேண்டும். ~~ஆதிசங்கரர்~~

No comments:

Post a Comment