அம்மா! உன் தரிசனத்தில் எல்லையில்லா ஆனந்தம் கொண்டேன், உன் அணைப்பிலும், முத்தத்திலும் என்னையே மறந்தேன். உன் புன்சிரிப்பில் பிறவிப் பயனை அடைந்துவிட்டேன் அம்மா! ..யாரும் என்னோடு இல்லாத போதும் நீ என்னோடு எப்பொழுதும் இருக்கிறாய். இதைவிட வேறு எதுவும் எனக்கு வேண்டாம் அம்மா! நீ என் காதிற்குள் கூறிய வார்த்தைகளில் ஆழ்ந்த அமைதியும், தெளிவும் உணர்ந்தேன். ஏழேழு ஜென்மத்திற்கும் உன் தாமரைப் பொற்பாதங்கள் பணிந்து, போற்றும் வரம் மட்டும் வேண்டும் அம்மா!

No comments:
Post a Comment