Sunday, October 21, 2012


உன்னைத் தேடி  அழுவதற்கு கூட கண்ணீர் வற்றி விட்டது கண்ணா! உன்னைத் தவிர வேறொன்றிலும்  என் மனம் நாட்டம் இல்லாமல் தவிக்கிறது. பார்க்கும் இடமெங்கும் உன்னையே காண்கிறேன்..எட்ட நின்று பார்க்கிறாய்  கிட்ட வந்தால் மாயமாகி விடுகிறாய்; என்னைப் பாடாய்ப் படுத்துறாய் மாயக்கண்ணா!  உன் அன்பெனும் இனிமையில் மூழ்க  ஏங்கும்  என்னை பிரிவென்னும் துன்பத்தில் மூழ்க வைத்து மகிழ்கிறாய் கண்ணா! உன் பிரிவால்  இறந்து  கொண்டிருக்கும் எனக்கு உன் நினைவுகள் தான் உயிர் கொடுக்கின்றன கண்ணா! உன் நினைவுகளே என்னை வாழவைத்துக்கொண்டிருக்கின்றன..அவற்றையும்  என்னிடமிருந்து பறித்து விடாதே கண்ணா!  
நீ வருவாய் என எதிர்பார்த்து  காத்திருப்பதே என் வாழ்க்கையாகிவிட்டது. உன்னைக் காணாமல் தீயாய்   எரிகின்றது என் இதயம்.. தூக்கி ஏறிய முடியாத உன் இனிய நினைவுகளுடன்  தவிக்கிறேன் கண்ணா! உன்னை நம்புவதை  விட உன்மேல் நான் கொண்ட  உண்மை அன்பை நம்புகிறேன்,  என்றோ நீ என்னைத் தேடி வருவாய்.. உன்னிடமிருந்து ஒரு சிறு துளி அன்பைத் தவிர  வேறு  எதுவுமே எனக்கு வேண்டாம் கண்ணா!  உன்னைத்தவிர  வேறு எதுவும்  எனக்கு  பெரிதில்லை கண்ணா!  என் உயிரோடு கலந்துவிட்ட நிஜம் நீ..என் உயிரே நீ தான் கண்ணா!  உந்தன் கடைக்கண் பார்வையில்  என் ஜென்மம் தீர  காத்திருக்கிறேன் கண்ணா!

No comments:

Post a Comment