கிருஷ்ணா! நீ என்னை ஏறெடுத்துப் பார்க்காமல் இருந்தாலும் என்னால் உன்னை மறக்க முடியவில்லை. உன்மேல் உள்ள அன்பு அதிகமாகிக் கொண்டே போகிறது. எந்த ஜென்மத்திலும் உன்னை மறக்கவே முடியாது கண்ணா! மனமும், உடலும் சோர்ந்து விட்டது கண்ணா! உன்னைப்போல் என்மேல் அன்பு காட்டுபவர் யாருமே இல்லை என்று பெருமையுடன் நினைத்திருந்தேன். நீயோ என்னைவிட்டு தொலைதூரம் போய்விட்டாய். நீ உன் கடைக்கண் பார்வையை என்மீது காட்டாவிட்டால் என் வாழ்வே நரகமாகி விடும். என் உயிரோடு கலந்த அழியாத நினைவுகளுடன் உன் பிரிவால் துடிக்கின்றேன் கண்ணா! இதெல்லாம் உனக்கு சொல்லித் தெரியணுமா..என் உணர்வுகள் உன்னையன்றி வேறு யார் அறிவார் கண்ணா? என் வாழ்வில் அன்புக்கு அர்த்தம் கொடுத்தவன் நீதானே கண்ணா! இப்போ என்னை விட்டு விலக உன்னால் எப்படி முடிந்தது? என்னைவிட்டு எங்கு போனாய் மாயக்கண்ணா? உன்னை காணாமல் தவிக்கின்றேன். இந்த அடிமையை நீ திரும்பிப் பார்க்காத அளவிற்கு என்ன பாவம் செய்தேனோ கிருஷ்ணா?உன்னால் எப்படி இப்படி கல்லாக இருக்க முடிகிறது? நான் அழுவதை ரசிப்பது உனக்கு சந்தோசமென்றால் உனக்காகவே அழுது கொண்டேயிருப்பேன். என்மீது அன்பு மழை பொழிவாய் என்று எதிர்பார்த்திருந்தேன். . ஆனால் நீயோ கண்ணீர் மழை பொழிய வைத்து விட்டு சென்றுவிட்டாய். "உன் உயிர் போகுமட்டும் அழு " என்று பார்த்துக் கொண்டிருக்கிறாயா? உனக்கு ஏன் கண்ணா இந்த கொலைவெறி? நீ எவ்வளவு சோதனைகளைக் கொடுத்தாலும் உன்னை மறக்கவோ, வெறுக்கவோ முடியாது கிருஷ்ணா, என் உயிர் பிரிந்தாலும் உன் அன்பெனும் இனிமைக்காக என் பிறவிகள் தொடரும். ஒவ்வொரு நொடியும் கண்ணீரோடு காத்திருக்கிறேன் உன் இனிய நினைவுகளோடு....
Sunday, September 16, 2012
கிருஷ்ணா! நீ என்னை ஏறெடுத்துப் பார்க்காமல் இருந்தாலும் என்னால் உன்னை மறக்க முடியவில்லை. உன்மேல் உள்ள அன்பு அதிகமாகிக் கொண்டே போகிறது. எந்த ஜென்மத்திலும் உன்னை மறக்கவே முடியாது கண்ணா! மனமும், உடலும் சோர்ந்து விட்டது கண்ணா! உன்னைப்போல் என்மேல் அன்பு காட்டுபவர் யாருமே இல்லை என்று பெருமையுடன் நினைத்திருந்தேன். நீயோ என்னைவிட்டு தொலைதூரம் போய்விட்டாய். நீ உன் கடைக்கண் பார்வையை என்மீது காட்டாவிட்டால் என் வாழ்வே நரகமாகி விடும். என் உயிரோடு கலந்த அழியாத நினைவுகளுடன் உன் பிரிவால் துடிக்கின்றேன் கண்ணா! இதெல்லாம் உனக்கு சொல்லித் தெரியணுமா..என் உணர்வுகள் உன்னையன்றி வேறு யார் அறிவார் கண்ணா? என் வாழ்வில் அன்புக்கு அர்த்தம் கொடுத்தவன் நீதானே கண்ணா! இப்போ என்னை விட்டு விலக உன்னால் எப்படி முடிந்தது? என்னைவிட்டு எங்கு போனாய் மாயக்கண்ணா? உன்னை காணாமல் தவிக்கின்றேன். இந்த அடிமையை நீ திரும்பிப் பார்க்காத அளவிற்கு என்ன பாவம் செய்தேனோ கிருஷ்ணா?உன்னால் எப்படி இப்படி கல்லாக இருக்க முடிகிறது? நான் அழுவதை ரசிப்பது உனக்கு சந்தோசமென்றால் உனக்காகவே அழுது கொண்டேயிருப்பேன். என்மீது அன்பு மழை பொழிவாய் என்று எதிர்பார்த்திருந்தேன். . ஆனால் நீயோ கண்ணீர் மழை பொழிய வைத்து விட்டு சென்றுவிட்டாய். "உன் உயிர் போகுமட்டும் அழு " என்று பார்த்துக் கொண்டிருக்கிறாயா? உனக்கு ஏன் கண்ணா இந்த கொலைவெறி? நீ எவ்வளவு சோதனைகளைக் கொடுத்தாலும் உன்னை மறக்கவோ, வெறுக்கவோ முடியாது கிருஷ்ணா, என் உயிர் பிரிந்தாலும் உன் அன்பெனும் இனிமைக்காக என் பிறவிகள் தொடரும். ஒவ்வொரு நொடியும் கண்ணீரோடு காத்திருக்கிறேன் உன் இனிய நினைவுகளோடு....
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment