அவதாரங்கள்
இறைவன் உலகின் மீது கொண்ட கருணையால் பல்வேறு அவதாரங்கள் எடுத்து உலகிற்கு வருகிறார் என்ற தெய்வீக ரகசியம் சனாதன தர்மத்தின் ரகசியமாகும். உலகில் அதர்மம் அதிகரிக்கவும், நன்மக்கள் வருந்தவும் செய்யும் போதுதான் இறைவன் அவதரிக்கிறார். ஸ்ரீமத் பகவத்கீதையின் கூற்றுப்படி தர்மத்தை நிலை நிறுத்துவதும், தீயோரைத் தண்டிப்பதும்தான் இறை அவதாரத்தின் திவ்வியமான லட்சியங்கள் ஆகும். இது விஷ்வ பிரேமையின் மூலமே சாத்தியமாகிறது. எல்லாம் வல்ல இறைவனுக்கு எவ்வடிவத்தையும் எடுக்கவும், விரும்பியது போல் லீலை நடத்தவும் இயலும் என்பது அவதாரத்தின் பொருள்.

No comments:
Post a Comment