இந்துமதம் என்று அறியப்படும் மதம் சனாதன தர்மம் என்றும் சொல்லப்படுகிறது. ஆதியற்ற வேதமே இதன் ஆதார நூலாகும். சனாதனம் என்றால் என்றும் உள்ளது என்று பொருள். இந்து தர்மம் எப்போது ஆரம்பமாயிற்று என்று கூறுவது இயலாத செயல். அதேபோல் இதற்கு முடிவும் இல்லை. காலத்தின் ஓட்டம் சக்கர கதியில் செல்கிறது. அதனால், யுகங்கள் மீண்டும் மீண்டும் ஆரம்பமாகும். பிரளயங்கள் மீண்டும் மீண்டும் தோன்றும். ஆனால், சனாதனதர்மம் என்றும் நிலைத்திருக்கும். காரணம், அது பிரபஞ்சத்தைக் கட்டுபடுத்தும் நியதிகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது. அதனால்தான் இந்து தர்மத்தை நிறுவியவர் எனச் சொல்ல யாருமில்லை. ----மாத்ருவாணி---

No comments:
Post a Comment