பாரதப் போர் முடிந்தது. தர்மர் முடி சூடிக் கொண்டார். கண்ணன் துவாரகைக்கு விடை பெரும் நேரம் வந்தது. வேதனையுடன் தர்மர் சொல்கிறார். " கண்ணா! எங்கள் தெய்வமே! உன்னைப் போகாதே என்று சொன்னால் அது அபமங்களம். உன்னை இரு என்று கட்டளையிட்டால் அது மமதை. உன்னைப் போ என்று சொன்னால் செய்நன்றி மறந்தவனாவேன். உன் இஷ்டம் போல் செய் என்றால் அது அசட்டையாக கருதப்படும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் உன்னிடம் நாங்கள் வேண்டுவதெல்லாம் இதுதான். உன் இதயத்தில் எங்களுக்கு எப்போதும் தனி இடம் வேண்டும். உன்னை ஒருபோதும் மறவாதிருக்க வேண்டும்"

No comments:
Post a Comment