மும்மூர்த்திகள்: ஒரே தெய்வத்தின் மூன்று இயல்புகள்
சனாதன தர்மத்தில் இறைவனின் நிர்க்குண பாவமும், சகுன பாவமும் தனிச் சிறப்புகளுடன் விவரிக்கப்பட்டுள்ளன. படைத்து, காத்து, அழித்து பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் இயல்பு சகுன இறைவனுக்கு உரியதாகும். அதே சமயம், படைப்புக்கு அப்பாற்பட்ட நிலையானதும், மாற்றம் ஏதுமில்லாததுமான இறை குணமே பிரம்மமாகும். அது நிர்குணம் என்று சொல்லலாம். பிரம்மம் படைப்பென்னும் லீலை புரிய சங்கல்பிக்கும் போது சகுன இறைவனின் பாவங்கள் தோன்றுகின்றன. அவையே பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன். இவை மூன்றும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை நடத்தும் பிரம்மத்தின் பாவங்களாகும். ஒரே சைதன்யமே மும்மூர்த்திகள் வடிவத்தில் வெளிப்படுகிறது
.
விக்கிரகத்தை வழிபடுவதன் தத்துவம்.
இறைவனின் அர்ச்சாவதார வடிவங்களாக விளங்குபவை விக்கிரகங்கள். மகான்கள் பிராணப் பிரதிஷ்டையின் மூலமாக விக்கிரகப் பிரதிஷ்டை செய்தால் அங்கே இறைசக்தியின் சாந்நித்தியம் உண்டாகும். விக்கிரகங்களை பக்தியுடன் வழிபட்டால் நிச்சயமாகப் பலன் கிடைக்கும். விக்கிரகத்தை தெய்வமாகக் கருதித்தான் பக்தர்கள் வழிபடுகிறார்கள். அபிஷேகம், அர்ச்சனை, நைவேத்தியம் போன்றவற்றை ஒரு மனிதனுக்கு கொடுப்பது போன்ற பாவனையுடனும், நம்பிக்கையுடனும்தான் விக்கிரக வடிவிலுள்ள தெய்வத்திற்கு கொடுக்கிறார்கள். இதற்கு சாஸ்திர பூர்வமான முத்திரைகளும், அனுஷ்டானங்களும் உள்ளன. இருப்பினும் அன்புடன் கூடிய வழிபாடுதான் இறைவனுக்கு விருப்பமானது. ஸ்ரீராம கிருஷ்ணரைப் போன்ற மகான்கள் விக்கிரக ஆராதனையின் மூலமும் இறை அனுபூதி பெறமுடியும் என்பதற்கு நேரடி உதாரணங்களாவர்.
No comments:
Post a Comment